மூணாறு: மூணாறு அருகே காட்டுயானை அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு குட்டியார் வேலியில் காட்டுயானை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இறங்கிய காட்டுயானை கூட்டம், அங்கிருந்த சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை அடித்து சேதப்படுத்தியது. கடந்த 3ம் தேதி ஆட்டோ டிரைவரையும் தாக்கி உள்ளது. குட்டியார் வேலி பகுதியில் அரசிடம் இருந்து இலவசமாக கிடைத்த இந்த இடத்தில் தான் தோட்ட தொழிலாளர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.