சென்னை: இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் என கூறினார். 24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என கூறினார். அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.