சென்னை: குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வண்ணவிளக்குகளை தவறாக பயன்படுத்தியதாக 4,456 வழக்குகளும், கருப்பு ஸ்டிக்கர் தொடர்பாக 4,697 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான நம்பர் பிளேட் பயன்படுத்துவது தொடர்பாக சுமார் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.