சென்னை: வடகிழக்கு காற்றலையின் காரணமாக வரும் 6 மற்றும் 7 தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று அந்தமையம் கூறியதுள்ளது. வரும் 5 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.