சென்னை: புத்தாண்டு இரவு கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் சிசிடிவி பதிவுகள் உதவியுடன் கைது செய்தனர். கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது. மேலும், தடையை மீறி மெரினா உள்ளிட்ட கடற்கரையில் ஒன்று கூடும் பொதுமக்களை கட்டுப்படுத்தவும், பைக் ரேசில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், கடந்த 31ம் தேதி இரவு முதல் அதிகாலை வரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவசர தேவைக்கான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.