சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் கேமராக்களை இயக்கவும், கணினி சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்த அடிப்படையில் 727 கணினி உதவியாளர்கள் மற்றும் 575 கேமரா ஆபரேட்டர்கள் என மொத்தம் 1,302 பேர் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கணினி உதவியாளர்கள் கேமரா ஆபரேட்டர்கள் சிலர் இடைத்தரகர்கள் உடன் இணைந்து கொண்டு செயல்படுவதாக, பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் பணம் கேட்பதாக பதிவுத்துறை தலைமைக்கு புகார் வந்தது. இதில், சார்பதிவாளர்கள் சிலர் பணம் கேட்பதாக கூறி ஆபரேட்டர்கள் வசூல் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.மேலும், இந்த ஆபரேட்டர்கள் பலரும் சார்பதிவாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர்.