அரசு மாணவர் விடுதியில் திருட்டு: போலீசார் விசாரணை

திருப்போரூர்: திருப்போரூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஒட்டி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. கடந்த 1 வாரமாக பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் அவரவர் ஊருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று பகல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வந்த சிலர் மாணவர் விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர்கள் நடமாடுவதை பார்த்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்ததில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சிலிண்டர்களை திருட முயற்சித்தது தெரிய வந்தது. இருவரையும் பிடிக்க முற்பட்டதில் ஒருவனை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர், திருப்போரூர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: