சென்னை: தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் இடைவிடாமல் பணியாற்றுவோம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில்; 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது. தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் இடைவிடாமல் பணியாற்றுவோம். காவல்துறையின் சிறப்பான பணியால் தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம்.