ராஜபாளையத்தில் ஒரு டன் குட்கா பறிமுதல்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பொன்னகரம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, பிரபல மசாலா கம்பெனியின் பெயரில் ஏஜென்சி எடுத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. போலீசார் அந்த வாகனத்திலிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பண்டல்களை பறிமுதல் செய்து, கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.

Related Stories: