சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் புத்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணைத்தலைவர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கே.எஸ்.அழகிரி புத்தாண்டு கேக்கை வெட்டி கட்சியினருக்கு வழங்கினார். பின்னர் மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு, தலா ரூ.100 ரொக்கப்பரிசு ஆகியவற்றை கே.எஸ்.அழகிரி வழங்கினார். விழாவில் விஜய் வசந்த் எம்பி, பொருளாளர் ரூபி மனோகரன், துணை தலைவர்கள் பொன்கிருஷ்ணமூர்த்தி, தாமேதரன், பொது செயலாளர் ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர்கள் எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத், டெல்லி பாபு, எம்.ஏ.முத்தழகன், அடையார் துரை, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட காங்கிரசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.