சென்னை: நெற்குன்றத்தைச் சேர்ந்த பரிமளா தனது கணவர் தீஜே தயாள், மாமியார் கீதா, மைத்துனி சபீதா, மைத்துனியின் கணவர் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிராக குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளித்தார். கடந்த 2013ம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த புகாரின்படி, நான்கு பேருக்கு எதிராக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு 2016ம் ஆண்டு எழும்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சபீதா மற்றும் ஸ்ரீநாத் மீதான வழக்கை தனியாக பிரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் இருவருக்கும் எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து 2020ம் ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது.