திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில், ஸ்ரீதேவிகுப்பத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் கே.திராவிடபக்தன், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராம்குமார், வட்டார மருத்துவர் காந்திமதி முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.இந்திரா வரவேற்றார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கி வாழ்த்தி பேசினார்.