அலங்காநல்லூர்: பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15ம் தேதியும், அலங்காநல்லூரில் 16ம் தேதியும் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற குறுகிய நாட்களே உள்ள நிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு மேற்பார்வையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் சீரமைப்பு, காளைகள் சேகரிக்கும் இடம், காளைகளுக்கான உணவு, தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்ளிட்ட பார்வையாளர் மேடை அமையும் இடங்களை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் ஜேசிபி மூலம் மஞ்சமலை ஆற்று திடல், வாடிவாசல் பகுதி சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.