காஞ்சி, விழுப்புரம் மீன்பிடி துறைமுகத்திற்கான டெண்டர் வௌியிட்டதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில் மனு

சென்னை: தமிழக மீன்வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் ஆகிய கழிவேலி நீர்பிடிப்பு பகுதிகளில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 235 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான என்.மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘துறைமுக கட்டுமான பணிக்காக விதிகளை மீறி  திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் பலனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 22 கோடியே 46 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.  எனவே, டெண்டரை ரத்து செ்ய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘விதிகளுக்கு உட்பட்டு டெண்டர்  ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: