டெல்லி : இந்திய பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் பெரும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 2வது நிதிநிலை தன்மை அறிக்கை மும்பையில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் பணவீக்க விகிதம் மோசமான நிலையில் இருப்பதாக வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். கொரோனா முதல் மற்றும் 2வது அலைகள் மற்றும் அதனால் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.