காஞ்சிபுரம்: மத்திய அரசு சார்பில், ஒமிக்ரான் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பியது. இதைதொடர்ந்து, மத்திய குழுவில் உள்ள மருத்துவர்கள் வனிதா, பிரபா, சந்தோஷ், தினேஷ்பாபு ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்புதூரில் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டனர். பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்து,