ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களான மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டிருக்கிறது. 2022ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினம் முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பை புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு தொடங்கி வைத்தது. ஒன்றிய அரசும் சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து, பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விலை குறைப்பை முன்னெடுத்து வந்தன.