சென்னை: பொங்கல் பண்டிகைக்காக அரசால் வழங்கப்பட உள்ள 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற கைரேகை கட்டாயம் இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று தர ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருள்கள் கொண்ட தொகுப்பானது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்காக கைரேகை கட்டாயம் இல்லை. குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலை கடையில் வந்து பெற்றுச் செல்லலாம். அதே நேரத்தில் வழக்கமான பொருட்களை பெறுவதற்கு கைரேகை கட்டாயம்.