செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தம்

குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது நேற்றுடன் நிறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மிக வேகமாக நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்துaகடந்த நவம்பர் 7ம் தேதி முதல் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. மேலும் தொடர் கனமழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடுவது தொடர்ந்தது. இந்தவேளையில், 51வது நாளான நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

தற்போது ஏரியில் நீரின் உயரம் 23.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3423 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து 300 கன அடியாகவும் உள்ளது. அதேபோல் நீர் வெளியேற்றும் அளவு 148 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இதுவரை தொடர்ந்து 51 நாட்களாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: