நீட் தேர்வுக்கு முடிவு தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு தோல்வி காரணமாக ஏற்பட்ட விரக்தியில் தமிழகத்தில் கூடலூர், தஞ்சை பேராவூரணியில் 2 மாணவிகள் அடுத்தடுத்து தங்கள் உயிர்களை மாய்த்துள்ள செய்தி வேதனை அளிக்கின்றது.

தமிழக மாணவிகளின் இந்த மரணம் தற்கொலை அல்ல, நீட் எனும் பயங்கரவாத அரக்கனால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனப் படுகொலையாகும். இந்த படுகொலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.  ஆகவே, தமிழக மாணவர்களின் தொடர் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீட் விலக்கு தீர்மானம் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: