சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் காரணமாக 2 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். மாணவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவப் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. எனவே, நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் மாணவர்கள் தங்களது இன்னுயிரை இழக்க வேண்டாம். உலகம் மிகவும் பெரியது.