16வது தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற 16-வது மெகா தடுப்பு முகாமில் 17.31 லட்சம் பேருக்கு ெகாரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதன்படி நேற்று காலை முதல் தடுப்பூசி முகாமில் இரவு நிலவரப்படி 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: