சென்னை: சென்னையில் ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் வடிகால்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.