ராமேஸ்வரம்: தனுஷ்கோடி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக நேற்று தெற்கு கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.1964, டிச.23ம் தேதி நள்ளிரவில் தனுஷ்கோடியில் பயங்கர புயல் காற்று வீசியது. இதில் உள்ளூர் மக்கள், ரயிலில் பயணம் செய்த வெளியூர் பயணிகள் என நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதன் 57ம் ஆண்டு நினைவுநாளையொட்டி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.