ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பொழுது போக்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன. அணையின் முன்புறம் வலது மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, யானை சறுக்கல், நீருற்றுகள், புல்தரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு அம்சங்கள் உள்ளன. இதில், வலதுகரைப் பகுதியில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் சுற்றிபார்க்கும் வைகை உல்லாச ரயில் உள்ளது.