ராணிப்பேட்டை: அரக்கோணம் - காட்பாடி இடையே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை 3 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வழியே செல்லக்கூடிய ஏலகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரக்கோணம் - ஜோலார்பேட்டை, அரக்கோணம் காட்பாடி மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்து ஒரே நேரத்தில் அரக்கோணம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.