சென்னை: வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், ஒரு பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்ட விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.