தமிழகத்தில் 607 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று 607 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:

 தமிழகத்தில் நேற்று 1,03,938 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 607 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,42,224 ஆக உள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து 689 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,98,628 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் நேற்று உயிரிழந்தனர். அதன்படி சென்னையில் 2 பேரும், கோவை, தருமபுரி, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 36,707 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகபட்சமாக சென்னையில் 139 பேரும், கோவையில் 102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: