சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 55 தமிழக மீனவர்களை, கச்சத்தீவு அருகேயுள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைப்படுத்தி, அவர்களது 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை ஜனவரி 3ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவின்படி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.