புழல்: சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்குமார் (34), கேரள மாநிலத்தில் இருந்து நேற்று லாரியில் ரப்பர் லோடு ஏற்றிக்கொண்டு சோழவரம் அடுத்த இருளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு வந்தார். அப்போது, ராணுவ உடையில் இருந்த வாலிபர், லாரியை தடுத்து நிறுத்தி, டிரைவர் சுரேஷ்குமாரிடம் வண்டியின் ஆவணங்களை கேட்டுள்ளார். அவர், நீங்கள் எதற்கு ஆவணத்தை கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிஓட முயற்சித்தார்.