ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜையில் பொதுமக்கள் பங்கேற்று வழிப்பட்டனர். ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, ஆருத்ரா விழாவையொட்டி அதிகாலையில் விநாயகர், முருகன் - வள்ளி - தெய்வானை, வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.