பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாத்திரம் கழுவ வைத்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி கிராமத்தில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியை சுகுமாரி, 7ம் வகுப்பு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பள்ளி ஆசிரியர் ஸ்டீபன், மதிய உணவுக்குப்பின் தனது சாப்பாட்டு பாத்திரங்களை மாணவிகளை சுத்தம் செய்ய சொல்வதாகவும் புகார் கூறப்பட்டது.