குன்னூர்: குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதை ஆடர்லி அருகே கடந்த அக்டோபர் 23ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்ததால், மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதியும் மலை ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.