திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் மீனவர் வலையில் அம்மன் சிலை சிக்கியது. திருச்செந்தூர் அமலிநகர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் விஜயன் (37). இவர். கடந்த 15ம் தேதி இரவு அமலிநகர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் விரித்த வலையில் சுமார் ஒரு அடி உயரமுள்ள மீனாட்சி அம்மன் சிலை சிக்கியது. இதையடுத்து அவர், சிலையை கடற்கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அந்த சிலை ஊர்நலக் கமிட்டி மற்றும் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.