செங்கல்பட்டு: அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்களின் அடிப்படையில் தான் அதிரடி சோதனைகள் நடைபெறுகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், நாள்தோறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க கைவிடப்பட்ட மேம்பால பணிகளுக்கு மீண்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்று சுமார் 163 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகளை துவங்கி வைத்தார்.