திருநங்கை எஸ்ஐ ரத்ததானம் செய்தும் பலனில்லை அண்ணாசாலை காவலர் உயிரிழப்பு

சென்னை: சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கரவேல் (51). சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தலைமை காவலராக வேலை செய்து வந்தார். மஞ்சள் காமாலை நோய் மற்றும் கல்லீரல் பிரச்னனையால் பாதிக்கப்பட்ட இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனே 3 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. அண்ணாசாலை காவல் நிலையத்தில் உடன் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரான திருநங்கை பிரித்திகா யாசினி, உடனே மருத்துவமனைக்கு சென்று 350 மி.லிட்டர் ரத்ததானம் அளித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சங்கரவேல் மேல் சிகிச்சைக்காக கடந்த வாரம் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு உயிரிழந்தார். அவர் மஞ்சள்காமாலையால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு போலீசார் மலர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: