சென்னை: ஆவடியில் சி.ஆர்.பி.எப். மற்றும் டிமாங் திவ்யாங்கா இணைந்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்துக் கொண்டனர். இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப்.-ல் பணிபுரியும் அதிகாரிகள் 10 பேர் மும்பையில் இருந்து வந்த மாடல் அழகிகளுடன் ராம்ப் வாக் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் நிகழ்ச்சியில் கடந்த 2018ம் ஆண்டு பாண்டிசேரி முதல் கடலூர் செல்லும் வழியில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை தனது கைகளை மட்டும் பயன்படுத்தி நீச்சல் அடித்து சாதனை படைத்த ஸ்ரீராம் கலந்துக்கொண்டு மும்பை அழகிகளுடன் ராம்ப் வாக் செய்தார்.