சென்னை: தி.நகர் துரைசாமி பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென 5 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தி.நகர் துரைசாமி பாலத்தில் இருந்து அசோக் நகர் செல்லும் பிருந்தாவனம் சாாலையில் நேற்று காலை திடீரென 5 அடி அகலத்திற்கு 3 ஆடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அசோக் நகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை சரி செய்தனர்.