ராஜஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் பைகானிர் பகுதியில் நேற்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இது குறித்து  தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது, ‘ இது பாகிஸ்தானை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கம், இதன் காரணமாக ராஜஸ்தான் வரை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories: