தூத்துக்குடி: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாளை தூத்துக்குடி வருகிறார். சென்னையிலிருந்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாளை காலை 10 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு 11 மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் எட்டயபுரத்திற்கு சென்று அங்கு பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார்.