புதுகை அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி நகை கடன் முறைகேடு

புதுக்கோட்டை: கீரனூர், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இதில், நகைக்கடனுக்காக கணக்குப்படி ரூ.3.63 கோடி மதிப்பிலான 934 பொட்டலங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில், 823 பொட்டலங்கள் மட்டுமே வங்கியிலுள்ள லாக்கரில் இருந்தன. 102 பொட்டலங்கள் இல்லை என தெரிய வந்தது. இவற்றின் கடன் மதிப்பு ரூ.1.08 கோடி. இந்த நகைக்கடன்கள் யார் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து வங்கி செயலர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் கனகவேலு ஆகியோரிடம் 3 நாட்களாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து வங்கிக்கு சேர வேண்டிய மொத்த தொகையும் திரும்ப பெறப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், வங்கி செயலர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Related Stories: