பட்டினப்பாக்கத்தில் 216 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (10.12.2021) டொம்மிங்குப்பத்தில் வசித்த 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பட்டினப்பாக்கத்தில் 400 சதுரஅடியில் தரைதளத்துடன் 4 அடுக்குமாடி குடியிருப்புகள், 11 தொகுப்புகளாக மொத்தம் 1188 குடியிருப்புகள் ரூ.152 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. டொம்மிங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1983-ல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பழுந்தடைந்துள்ளதால், அதில் வசித்த 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.27.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாற்று குடியிருப்புகளில் குடியேறுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை இன்று அமைச்சர் வழங்கினார்.

இக்குடியிருப்புகளில் அடிப்படை தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி மற்றும் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மின்தூக்கி (டுகைவ) மற்றும் மின்னாக்கி (ழுநநேசயவடிச) வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த் ராவ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மேற்பார்வை பொறியாளர் அ .செல்வமணி, செயற்பொறியாளர் தா.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: