சென்னை: புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழநாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கிரவுன் ரோடு எனப்படும் திட்டத்திற்கு சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை சர்வதேச நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டது. ஆரோவில் நகரத்தின் மைய பகுதியில் உள்ள மரங்களை நகர வளர்ச்சிக்குழு பொக்லைன் எந்திரங்களை கொண்டு வெட்டியதை அறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.