சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். 2.5 ஹெக்டேர் பரப்பளவில் 20 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த சதுப்பு நில பகுதியில் 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நில நீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையான ஒட்டுமீன் இனங்கள் என பல்வேறு உயிரினங்கள் இருக்கக்கூடிய பகுதி.