சென்னை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐகோர்ட்டில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்ப்பணிப்போடு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நீர்வள ஆதராங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.