புதுச்சேரி: புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் படுகிறது.20 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கனவே அரை நாள் வகுப்புகள் இயங்கி வந்த ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் முழு நேர பள்ளி வகுப்புகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.