லாரி மீது மொபட் மோதி மகன் பலி; தாய் சீரியஸ்

புழல்: கே.கே.நகர் டபுள் டேங்க் பகுதியை சேர்ந்த ராமையன் மனைவி தேவி (40),  நேற்று காலை தனது மகன் தனுஷ்வரனுடன் (16) மொபட்டில் மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் புத்தகரம் வெங்கடேஸ்வரா நகர் அருகே சென்றபோது, பழுதாகி நின்ற லாரி மீது மொபட் மோதி படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தனுஷ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான உத்தரமேரூரை சேர்ந்த லாரி டிரைவர் குணசேகரனை (19) கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: