சென்னை: தமிழகம் முழுவதும் 5 எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரை நகர போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த ஈஸ்வரன் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராகவும், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி எஸ்பியாக இருந்த ஆறுமுகசாமி மதுரை நகர போக்குவரத்து துணை கமிஷனராகவும், திருநெல்வேலி எஸ்பியாக இருந்த மணிவண்ணன் கடந்த வாரம் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.