பெரம்பூர்: சென்னை யில் கனமழை காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். குறிப்பாக வட சென்னைக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி விழுந்து செல்கின்றனர். மேலும், இந்த சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து போலீசாரே தற்காலிகமாக மேற்கண்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.