அரியலூர்: மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று அளித்த பேட்டி: தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழக முதல்வரே நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.